11 கோடி ரூபா பெறுமதியான 45 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் சிக்கின!

சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 45 லட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு  அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே லைன் கொள்கலன் பிரிவில்  வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே  கைப்பற்றப்பட்டன என சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் சுங்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.

இந்தக் கொள்கலன் கடந்த மாதம் 9ஆம் திகதி  இந்தியாவின் கட்டுப்பள்ள துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சட்ட விரோத இறக்குமதி தொடர்பில், இந்த கொள்கலனை விடுவிக்க வந்த இருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.