புகையிரதத்தில் மோதி யானை உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி யானை ஒன்று நேற்று புதன்கிழமை (13) இரவு  உயிரிழந்துள்ளது.

வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற அருகிலுள்ள இடத்தில் மூன்று நாட்களுக்கு முன் இரவு புளதிசி புகையிரதத்தில் மோதி மற்றொரு யானை இறந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.