நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் மீதான வழக்கு விசாரணை பெப்ரவரி 15 இல்!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 15ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து பண மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.