ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் அஷ்ரபின் 23 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

 

(சர்ஜுன் லாபீர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்பின் 23 ஆவது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், அலி சாஹீர் மௌலானா, ஹூனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான போராளிகள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.