சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு ஆளுநர் செந்தில் வலியுறுத்துகிறார்!

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் நாடாளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான  நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்  அதி கவனத்துடன் செயற்படக்கூடிய பொறுப்பு உள்ளது.

அப்பொறுப்பில்  அவதானக்குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுடன்,  சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.