தாயிலிருந்து சிசுவிற்கு எச்.ஐ.வி. மற்றும் சிபிலிஸ் பரவுவதைத் தடுப்பதற்கான பயிற்சிக் கருத்தரங்கு

 

நூருல் ஹூதா உமர்

தாயிலிருந்து சிசுவிற்கு எச்.ஐ.வி. மற்றும் சிபிலிஸ் பரவுவதைத் தடுப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார தாதியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பாலியல் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது சூம் தொழிநுட்பத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமை உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

தாயிலிருந்து சிசுவிற்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலி பரவுவதைத் தடுத்தல், குறித்த நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள், நோய் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடர்பாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பியூமி பெரேரா இந்நிகழ்வின் போது பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு விரிவுரையாற்றியதுடன் பாலியல் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம்.தில்ஷான், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம்.பஸால், பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எ.எம்.ஹில்மி ஆகியோரும் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.