மருதமுனை எவரெடிக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்!

 

நூருல் ஹூதா உமர்

மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் ‘மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்’ எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்த்தாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகத்துடனான கலந்துரையாடல் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் கலீல் முஸ்தபாவுடன் மருதமுனை பிரதான வீதி முஸ்தபா காம்ப்லெஸ் நிறுவனக் காரியாலயத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன் போது மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் எவரெடி விளையாட்டுக்கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை எவரெடி விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கி உதவிய தொழிலதிபர் கலீல் முஸ்தபா மற்றும் மனாரியன் 88 பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல்.முக்தார் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் எவரடி விளையாட்டு கழக செயலாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.