நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜரோப்பிய ஒன்றியம் அவதானம்

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் Tiina jortikka க்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துக் கொண்டதன் பின்னரே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனிதவுரிமை மீறல்கள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களை , ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும் Tiina jortikka தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.