யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ்மீது காட்டு யானை தாக்கு! அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் – தந்திரிமலை பிரதான வீதியின் மணிங்கமுவ – ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை காட்டு யானை தாக்கியுள்ளது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலில் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து அநுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது இந்தக் காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்த யானை அப்பகுதியில் பல உயிர்களைக் கொன்றுள்ளதுடன், வீடுகளுக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு முன்னரும் வீதியில் செல்லும் வாகனங்களைத் தாக்கியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.