பொருளாதார பாதிப்பால் மூளைசாலிகள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது! ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகிறார்

பொருளாதாரப் பாதிப்பால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களைத் திருத்திக்கொண்டுள்ளோம். மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதாரப் பாதிப்பின் காரணமாகவே பெரும்பாலான மூளைசாலிகள் அப்போது  நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

பொருளாதாரத்தில் அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களைத் தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.

பொருளாதாரப் பாதிப்பின் காரணமாகவே தற்போதும் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிற்றுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர், யுவதிகள் தொழில் பயிற்சிகளை பெற்று நாட்டை விட்டு தொழில்வாய்புகளுக்காக வெளியேறுகிறார்கள்.

இதனைர் பாதகமான அம்சம் என்று கருத முடியாது. தேசிய தொழிற்றுறையைப் பாதுகாக்க அமைச்சு சார் மட்டத்தில் பல புதிய கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வரிக் கொள்கையைத் திருத்தியமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் உணவல்லாத பணவீக்கம் சடுதியாகக் குறைவடைந்துள்ளன.

இந்த ஆண்டின் இறுதி பகுதிக்குள் வங்கி  வட்டி வீதங்கள் குறைக்கப்படும். நெருக்கடியான நிலையில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சியடைந்து வருகிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.