வவுனியாவில் காணாமல்போன மகனைத் தேடிய தந்தை மரணம்

வவுனியாவில் யுத்தகாலத்தில் காணாமல்போன தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே வியாழக்கிழமை (12) மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும்  போராட்டங்களில் குறித்த தந்தை கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டங்களில் கலந்துகொண்டிருந்த நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.