புத்தர்சிலை வைக்கப்பட்ட பெட்டியை சேதப்படுத்தியவர் கந்தளாயில் கைது!

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து இரும்பு சுற்றியலையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.