விஜயின் லியோ பார்க்கச் சென்றவர்களுக்கு மட்டக்களப்பில் வாள் வெட்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற குழுக்களுக்கிடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.