முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் காயம் – யாழில் சம்பவம்

வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 5 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் விபத்தில் காயமடைந்ததாகவும், அவ்வாறு காயமடைந்தவர்களில் 3 பெண்கள், ஒரு குழந்தை அடங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.