கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களின் நிறைவேற்றுக்குழு மன்னாரில் கூடியது!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில் ரெலோ கட்சி சார்பாக கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேன், ஈபி.ஆர்.எல்.எப். கட்சி சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா.துரைரட்னம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், கட்சியின் செயலாளர் ஆர்.ராகவன், தமிழ் தேசிய கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி, கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி சார்ந்தும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும், பல்வேறு விடயங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.