பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்தாரெனக் கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தார் எனக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை  பொல்கொட நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பாணந்துறை கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய நிபுன் நவோத் பெர்னாண்டோ என குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மரணம் மற்றும் சடலம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நீதிவான் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் தனியார்  பிரத்தியோக வகுப்பு ஆசிரியராக கடமையாற்றி வருகிறார் எனவும், பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து மனவேதனையடைந்திருந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.