பாரவூர்தியுடன் இ.போ.ச. பஸ் வவுனியாவில் மோதி விபத்து! மூவர் காயம்

வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது –

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பாரவூர்த்தி ஓமந்தைப் பகுதியில் பயணித்த போது வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாரவூர்தியை செலுத்திய போது அதே வழியில் வந்த இ.போ.சபை பஸ் வேகக் கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து பாரவூத்தி வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இவ்விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துநர் காயமடைந்ததுடன், பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.