சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் மட்டும் 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளி பாதமலை யாத்திரை காலம் டிசம்பர் 26 ஆம் திகதி போயா அன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை எடுத்துச் செல்லாமல் சிவனொளி பாதமலையை தரிசிக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பக்தர்களுக்கு தேவையான வீதிகள், நீர், மின்சாரம் மற்றும் ஏனைய பொது வசதிகள் எதிர்வரும் நாட்களில் அபிவிருத்தி செய்யப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.