யாழில் சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம்,  காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று(20) அதிகாலை 101 கிலோ 750 கிராம்  நிறைகொண்ட சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.