இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புதல்: இனவாத கருத்துகளை முன்வைக்கவேண்டாம்! மனுஷநாணயக்கார கூறுகிறார்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்பும் விடயத்தில் இனவாதக் கருத்துக்களை முன்வைக்க  வேண்டாம். இன,மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அமர்வின் போது இலங்கையிலிருந்து 10000 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளமை தொடர்பில் விசேட கூற்றை முன்வத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீமுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின்படி நாம் ஓர் அணிசேரா நாடு. இஸ்ரேல்-காசா யுத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். இதற்காக ஐ.நாவில் கூட நாம் குரல்கொடுத்துள்ளோம்.

இலங்கையிலிருந்து அரேபிய நாடுகளுக்கு பலர்  வேலை வாய்ப்புகளுக்கு செல்கின்றனர். அதேவேளை ஏதாவது ஒரு நாடு எம்மிடம் தமது நாட்டுக்கான  தொழிலாளர்களை கேட்கும்போது   நாம் இன ,மத ரீதியாக செயற்பட முடியாது.

இஸ்ரேல் – காசா யுத்தம் ஆரம்பித்த போது தொழிலாளர்களின் பாதுகாப்புக் கருதி தொழிலாளர்களை அங்கு அனுப்புவதைத் தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தோம்.

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

எனவே இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பக்கூடாது. இனவாதக் கருத்துக்களை முன்வைக்க  வேண்டாம். இன,மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.