புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மட்டக்களப்பில் வைத்துக் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவருமான சங்கரப்பிள்ளை நகுலேஸ் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மாவீரர்களின் பெற்றோர் ஒன்று கூடினர்.

இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் குறித்த காரியாலயத்துக்கு சென்று மாவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு சட்டவிரோதமானது நிகழ்வை நிறுத்துமாறு தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோத ஒன்று கூடல் செய்பாட்டில் ஈடுபட்டுள்ளனார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உபதலைவர் ச.நகுலேஸ் கைது செய்யப்பட்டார்.

இதில் கைது செய்யப்பட்ட அவரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை 14 நாள்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.