வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ்கூட்டமைப்பு கை உயர்த்தியது கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் சாட்டை

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் மிலேச்சத்தனமான, கோழைத்தனமான செயலை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த சம்பவத்தை புதிய ஜனநாயக மக்கள் முன்னனி முழுமையாக கண்டிக்கின்றது. இந்த காட்டுமிராண்டிப் பொலிசாரை உடனடியாக வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அல்லாவிட்டால் பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக பொலிசார் செயற்பட்ட விதம் தவறானது. ஒரு சில பொலிசார் மேற்கொள்ளும் செயற்பாடு மிக மோசமானதாக இருக்கின்றது.

குறித்த இளைஞர் திருட்டு சம்பவத்தில் உண்மையாக ஈடுபட்டிருந்தாலும் கூட, அவரை விசாரிப்பதற்கான பல விதிமுறைகள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை மீறி துன்புறுத்தி வற்புறுத்தப்பட்டு பெற்றோல் ஊற்றப்பட்டு சித்திரவதை செய்து அவரை கொலை செய்துள்ளார்கள்.

இந்த செயலை நிறுத்தியிருக்க வேண்டும். அச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை கைது செய்யாது அவர்களை வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல்.

சட்டத்தரணி சிறிகாந்தா ஊடாக யாழ் நீதிமன்றில் இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரப்ப்பட்டது.

இவர்கள் மாபெரும் திருடர்கள். அவர்கள் அதனை திசை திருப்ப முயல்கிறார். இ

இவ்வாறான சம்பவங்கள் வடக்கு – கிழக்கில் நடைபெறும் நிலையில் இங்குள்ள தமிழ் கட்சிகள் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மக்களது பிரச்சனைக்கு குரல் கொடுக்க தயங்குவதில்லை. இந்த விடயம் சம்மந்தமாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் அவர்கள் உடனடியாக செயற்பட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.