வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நினைவேந்தல் !

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.

கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி கடலில் மிதக்க விடப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.