இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்!

இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டு உயரஸ்தானிகர் சண்டிலி இ.ஸ்சோல்க் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் கிழக்கின் பிரசித்தி பெற்ற பாடசாலையான ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி தேவைகள் குறித்தும் கல்லூரி அதிபருடனும் நலன் விரும்பிகளுடனும் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் ஏ பி மதன் நெறிப்படுத்தலில் குறித்த தென்னாபிரிக்க மிகஸ்தானிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அண்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும் பாடசாலையினுடைய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன் உள்ளிட்ட பலர் இங்கு சமுகம் அளித்திருந்தனர்.

பாடசாலையின் தேவைகள் குறித்து உயரஸ்தானிகரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.