முல்லைத்தீவின் மூத்த தவில் வித்துவான் இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை காலமானார்!
முல்லைத்தீவின் மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமான இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை இன்றைய தினம் புதன்கிழமை (29) அதிகாலை காலமானார்.
முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர், ‘முல்லைக் கலைக்கோன்’, ‘கலாபூஷணம்’, ‘முல்லை பேரொளி’ ஆகிய விருதுகளை பெற்ற இசை மேதையாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை (30) காலை 10 மணியளவில் அவரது முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை