மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!

 

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் சாண்டிலே எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) விஜயம் செய்து, சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார்.

அங்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகருடன் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது உயர்ஸ்தானிகருக்கு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகம் சுற்றிக்காட்டப்பட்டதுடன், மாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும் முக்கியஸ்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.