லயன்ஸ் கழகங்களால் நீரிழிவு நடை பவனி!

 

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நீரிழிவு நடைபவனியும் இரத்தப் பரிசோதனையும் நடைபெற்றது.

யாழ்ப்பாணமட் வண்ணார் பண்ணை சிவன் ஆலய முன்றிலில் ஆரம்பமான நடைபவனி, யாழ். பஸ்நிலையம் ஊடாக யாழ். போதனா வைத்தியசாலை வீதி ஊடாக கார்கிள்ஸ் கொம்பிளெக்ஸ் பகுதியைச் சென்றடைந்து நிறைவடைந்தது. பின்னர் அங்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன், இலவச குருதிப் பரிசோதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரும் சிறப்பு விருந்தினராக அகில இலங்கை லயன்ஸ் கழகங்களின் முன்னாள் தலைவர் லயன் தேவா டி பீற்றர், வடக்கின் முதலாவது ஆளுநர் லயன் எஸ்.எஸ். தங்கராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடைபவனியில் வடக்கில் உள்ள சகல லயன்ஸ் கழகங்களின் உறுப்பினர்கள் லியோ கழக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குருதிப் பரிசோதனையில் பங்குகொண்ட மக்களுக்கு கொய்யா, நாவல், மஞ்சள், கஜூ மரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேநேரம், வடபகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொள்ளவும் லயன்ஸ் கழகங்கள் திட்டமிட்டுள்ளன என லயன்ஸ் கழக முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.