சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் அதன் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலய தரம் 10 – 11 மாணவர்களுக்கு டெங்குநோயிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை வலி.தெற்கு பிரதேசசபைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சி.கார்த்தீபன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அஜந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆளுநரின் ஆலோசகரும் சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளருமான லயன் சி.ஹரிகரன், சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான – பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.