சர்வதேச மனக்கணித போட்டியில் யாழை சேர்ந்த சிறுவன் சாதனை!
2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
யுசி மாஸின் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை