சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் அதன் இரண்டாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவர்களுக்கு டெங்குநோயிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அஜந்தன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வரும் சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினருமான லயன் மு.செல்வஸ்தான்,மாவட்ட ஆளுநரின் ஆலோசகரும் சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளருமான லயன் சி.ஹரிகரன், சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான – பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்;று திங்கட்கிழமை சுன்னாகம் மயிலணி மகாவித்தியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நாளை (புதன்கிழமை) உடுவில் மகளிர் கல்லூரியில் நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.