இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: கொடிகாமத்தில் பயங்கரம்

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல், இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடியுள்ள நிலையில், இளைஞனின் வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த உடைமைகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.