யாழ். மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்துக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் குடிநீர் வசதி!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தின் குடிதண்ணீர் விநியோக  சீரற்ற செயற்பாட்டைச் சீர்செய்வதற்காக கழக உறுப்பினர் லயன் எஸ்.சசீந்திரராஜாவால் சீர்செய்வதற்கான நிதி அனுசரணை காசோலையாக வழங்கப்பட்டது.

வலி.வடக்கின் மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம். அந்தப் பிரதேசத்தில் மக்கள் தற்போதுதான் குடியேறி வருகின்றார்கள். அதனால் பாடசாலையின் தேவைப்பாடுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பாடசாலைச் சமூகத்தினர் லயன்ஸ் கழகத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள  ஒவ்வொரு பாடசாலைகளிலும் நடைபெற்று வஐகின்றது.

இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அஜந்தன் நிகழ்த்தி வருகிறார்.

அவர்களின் இந்தச் செயற்பாட்டின் மேலும் ஒரு பகுதியாக வலிகாமம் வலயத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கழிவுகளைத் தரம்பிரித்து இடுவதற்கு மூன்று வௌ;வேறு வர்;ணங்களைக் கொண்ட குப்பை வாளிகள் வழங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்துக்கு லயன் எஸ்.சசீந்திரராஜாவால் மூன்று குப்பை வாளிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளர் லயன் சி.ஹரிகரன், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஷ், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.