ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை நீதிவான் முன்னிலையில் அவர் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இரண்டாவது நாளாக முன்னிலையாகிய போது போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்துரைத்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜெரோம் பெர்னாண்டோ, வெளிநாட்டு தடை விதிக்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

அவரது கருத்துக்கள் தொடர்பாக பல மாதங்களாக சர்ச்சை தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அவர் நாடு திரும்பினார்.

இதனை தொடர்ந்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.