கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களுடன் ரிஷாத் சந்திப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கு சனிக்கிழமை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், கடற்தொழிலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூப், அதிபர் எம்.எஸ்.ஏ.அப்துல் அஸீஸ் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.