வெள்ளம் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருளுதவிகள்! நாவற்குழி பிரதேசத்தில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்திhல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவில் வசித்தாலும் எமது தாயக மக்களிற்கு கடந்த பத்து வருடங்களிற்கும் மேலாக பற்பல சமூகப்பனிகளையும் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்து வரும் ஒரு முதன்மை சமூக சேவையாளர் சிவலிங்கம் ரட்ணத்தின் நிதிப்பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்திலும்-சீயோன் தேவாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பத்தினருக்கு உலர ;உணவு மற்றும் பாய், தலையனை ஆகிய பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாவற்குழி பகுதியில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிரச்சினைகளையும் அவர்களது சூழ்நிலைகளையும்   கலாநிதி அகிலன் முத்துகுமாரசுவாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவர்களிற்கான உதவிகளை சாவகச்சேரி பொலிஸ் அத்தியர்சர் பாலித செனவிரட்ன மற்றும் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.