பொலிஸாரின் விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன! யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெருமிதம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –

கடந்த சில தினங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின்போது 100 இற்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொள்ளும் இந்த விசேட நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு, வன்முறைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன.

இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் நாள்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.