பொலிஸாரிடமிருந்து தப்பிக்க அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் காரில் மோதினர்!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு, மற்றொருவர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வீதியில் வந்த இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இதை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் இரண்டு இளைஞர்களையும் துரத்திச் சென்றுள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக இளைஞர்கள் அதி வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில், கந்தர்மடம் சந்தியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்தை எதிர்கொண்டனர்.

இதனையடுத்து, அந்த இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தப்பியோடியதோடு, மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.