சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் சிக்கின!

சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 1,955 கிலோ பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நுரைச்சோலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்குச் சொந்தமான கடற்படை கப்பலான தம்பபன்னி, நுரைச்சோலை பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில், நுரைச்சோலை பொருளாதார நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டபோதே கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார் என கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.