யாழ். வெற்றிலைக்கேணியில் 14 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு

 

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூடை ஒன்று மீட்கப்பட்டது.

அந்த சாக்கு மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் இருந்து 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ கேரள கஞ்சாவை மீட்டனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.