களுவாஞ்சிக்குடியில் விபத்து ; கணவன், மனைவி காயம்!

 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து படி ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ் விபத்தில் ஓட்டோவை செலுத்திச் சென்ற கணவனும் ஓட்டோவில் பயணித்த மனைவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.