கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சம்பவம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – இடைக்கட்டு பகுதியில்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இரண்டு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் –

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல், 810 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பினையும் அப்பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.