புத்தூரில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சனிக்கிழமை பெற்றோல் குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலால் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.