முந்தல் பிரதேசத்தில் இரு கார்கள் மோதி விபத்து; பத்துப் பேர் காயம்!

முந்தல் நகருக்கு அருகில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்து  சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து  நீர்கொழும்பு  நோக்கி பயணித்த காரும் சிலாபத்திலிருந்து முந்தல் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள், ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், காயமடைந்தவர்கள் உடனடியாக மூன்று அம்புலன்ஸ்களில் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.