ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சஜித்துடன் இணைந்தார்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஷிரித்த திசேரா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நாத்தாண்டி தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இவர் பல சந்தர்ப்பங்களில் பல அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வகித்தவராவார்.
கருத்துக்களேதுமில்லை