15 லீற்றர் கசிப்புடன் யாழில் தம்பதி கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த தம்பதியிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.