வடக்கை ஏனைய மாகாணங்களைப் போன்று   சமமாகப் பார்ப்பதே ஜனாதிபதியின் நோக்கம்!  சமன்ரத்னபிரிய கூறுகின்றார்

வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களை போன்று பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் சமனாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருக்கிறது என ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்னபிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெருமளவு நிதி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 11 பில்லியன் ரூபா காணப்படுகின்றது. மாவட்ட செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள் ஊடாக சேர்ந்து பயணிக்கவேண்டும். வரையறையில்லாத  பிரதேச ரீதியாக அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதே இலக்காக இருக்கின்றது.

மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் தமிழ் மக்களுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது என்று தெரியும்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான பிரச்சணை 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகும். இவர்களுக்கான பிரச்சினை இலகுவில் தீர்த்துவைப்பதற்காக 250 மில்லியன் ரூபாக்களை வழங்கவும் எதிர்பார்த்து இருப்பதாகத் தெரிவித்தார்.

சமுர்த்தி, அஸ்வசும போன்ற நிதி நிவாரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் யாழ்ப்பாண மாவட்டம் அதிஷ்டவசமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முறைப்பாடுகள் குறைவாகத்தான் இருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பல்கலைக்கழகங்களில் சிங்கள, ஆங்கில மொழியிலான மாணவர்களைக் கல்விகற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு புத்திசாலிகள். அவர்களுக்கான நவீனமயப்படும் விவசாய நலன்களையும் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேசத்தில் மின்வலு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்காக 2.2 பில்லியனை செலவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து காணிகள் இருந்து அடையாளம், ஆவணங்களை சரியாகக் காட்டிய 131 நபர்களது காணிகளை உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவித்துள்ளோம்.

இதில் 2,700 குடும்பங்கள் இன்னும் காணிகள்,வீடுகள் இல்லாமலும் வசித்துவருகின்றனர்.

அவர்களுக்கான காணிகள், வீடுகள்  பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகப்படும்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஒருசிலர் விடுதலையாகியுள்ளனர். சில குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் விடுதலையாகியுள்ளனர். சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு நடைபெற்று வருகின்றது. அவர்களும் மிகவிரைவில் விடுதலையாகுவார்கள்.

ஜனாதிபதி நாளாந்தம் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். வரிகள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.

வரிகள் இல்லாமல் அரசாங்கத்தின் செலவுகளை செலவு செய்யவேண்டும். 2100 பில்லியன் வரிச்சலுகை 2019 ஆண்டு காலப்பகுதியில் இழக்கப்பட்டது. அதன்காரணமாக நாடு பொருளாதார ரீதியாகப் பின்னடைவுக்கு காரணமாக இருந்ததுடன் தற்போது வரி அதிகரிப்புக்கும் காரணமாக இருக்கின்றது. அதனால் தான் வரி உயர்வும் அவசியமாக இருக்கின்றது. – என்றார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை சமூக விகார பணிப்பாளர் நாயகம் கீர்த்திதென்னகோன் உடன் இருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.