யாழ்.மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்விடுதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேற்படி கலந்துரையாடல் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களையும், கோரிக்கைக் கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால்  பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது அத்தோடு  வடபகுதியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக வடக்கில் நான் வருகை தரும் போதெல்லாம்  பிரச்சினை என்ன எனக் கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் தீர்வு என ஒரு  சில பிரச்சினைகளுடன் மாத்திரம் என்னிடம்
அணுகுவார்கள் அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்,

குறிப்பாக விவசாயத் துறையை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதே எமது நோக்கம் அத்தோடு
வெளிநாடுகளில் எவ்வாறு மின்சாரத்தை இயற்கை வளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள் அல்லது விவசாய உற்பத்தியை எவ்வாறு நவீன முறையில் உற்பத்தி செய்கின்றார்கள் போன்றவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். எனவே எதிர்வரும் காலங்களில்   நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும்.

அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.