பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்த பின் முதலீடுகளில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  இருவருக்கிடையிலான சந்திப்பு புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

மேலும் கலந்துரையாடும்போது –

கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில்  ஆளுநர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும். அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள  பசுமை சக்திவள திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.