பிரித்தானிய இளவரசி ஆன் யாழ் விஜயம்! வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன்  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கு வரவேற்பு அளித்தார்.

இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.