யுக்திய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.மனிதவுரிமை ஆணையர் கவலை

இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு பதில் கடுமையான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பது குறித்து ஐ.நா. அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.

டிசெம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் 29000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியில்லாமல் படையினர்  சோதனைகைளை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பியுள்ளனர் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது மக்கள் பல்வேறு மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அனுமதியற்ற தேடுதல்கள் கண்மூடித்தனமான கைதுகள், தடுத்துவைத்தல் மோசமாக நடத்துதல் சித்திரவதை பொது இடங்களில் ஆடைகளைக் களைந்து சோதனை போன்றன இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் தாங்கள் பொலிஸாரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் சமூகத்திற்கு பெரும்சவாலாக காணப்படுகின்ற போதிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை உரிய அணுகுமுறையில்லை போதைப்பொருள் துஸ்பிரயோகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் முதன்மையாக சமூக மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடையவை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் அவற்றை பயன்படுத்துபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும். உரிய முறைகளை பயன்படுத்தவேண்டும் வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தனது யுக்திய நடவடிக்கையை மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் மனித உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.